அம்பாறை மாவட்ட நிருபர்திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான மூன்றாவது வருட வலயமட்ட
விளையாட்டுப்போட்டி நேற்று (24) ம்திகதி தம்பிலுவில் மத்திய மகா
வித்தியாலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி திலகவதி
தலைமையில் நடைபெற்றது
இவ் நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளை த்தளபதி
எஸ்.எம்.எவ்.பெரேரா. மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்
செனவரெட்ண. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார,
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், மாகாண விவசாய கால்நடை
அபிவிருத்தி அமைச்சர் து.நவரெட்ணராஜா, ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட
இணைப்பாளர் எஸ்.புஸ்பகுமார் (இனியபாரதி)
மற்றும் கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஹாசீம், ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளர் வே.ஜெகதீசன், பொத்துவில் பிரதேச செயலாளர் வை.எம்.தௌபீக்,
திருக்கோவில் பிரதேச சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் திருமதி
இராஜேந்திரா சுலோச்சனா. கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர், உட்பட பலர் கலந்து
கொண்டு விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும்
வழங்கி வைத்தனர்












Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!