தம்பிலுவில் பிரதேசத்தில் ஒரு கிராம் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை செவ்வாய்கிழமை பகல் ஒரு கிராம் கஞ்சா போதைப் பொருளளுடன் பொலிசார் கைது செய்தனர்
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்திய போது இவரை எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்
இது தொடர்பான விசாரணையை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
---
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!