Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் நீராட சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாலக்கரச்சி குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த 12 வயது சிறுவனின் சடலம் 23.02.2012 புதன்கிழமை காலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்…

Image
திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாலக்கரச்சி குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த 12 வயது சிறுவனின் சடலம் 23.02.2012 புதன்கிழமை காலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்

விநாயகபுரம் பாலக்குடாவைச் சேர்ந்த தெய்வநாயகம் குடும்பத்தினர் தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கைக்காக சென்று தங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இருசிறுவர்கள் அருகில் உள்ள பாலக்கரச்சி குளத்தில் நீராடீக் கொண்டிருந்த போது விநாயகபுரம் பாலக்குடா பாலவிநாயகர் வீதியைச் சேர்ந்த தெய்வநாயகம் நிரோசன் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயரிழந்தார்

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம்  புதன்கிழமை காலை 10 மணிக்கு குளக்கரையை அடைந்தநிலையில் சடலம் மீட்கப்பட்டு அம்பாறை போதனாவைத்திய சாலையில் ஓப்படைக்கப்பட்டு பிரேதபரிசேதனையின் பின்னர்சடலம் உறவினரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
---

You may like these posts

Comments