திருக்கோவில் பிரதேச சபை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச சபையில் அதன் தவிசாளர் விவேகானந்தராசா புனிதராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.




திருக்கோவில் பிரதேச சபையில் அதன் தவிசாளர் விவேகானந்தராசா புனிதராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, திருக்கோவில் பிரதேச செயலாளரும் விசேட ஆணையாளருமான அழகரெட்னம் , சந்திர நேரு சந்திரகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பொது நூலகத்தில் விசேட நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக பிரதேச சபையின் பொறுப்பை கையேற்றனர்.இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரும் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!