நேற்று பிடிபட்டவர்கள் அப்பாவி பொதுமக்களே .. மொனராகல இருந்து தனது சகோதரரின் மனைவிக்கு குழந்தை பிறந்ததை தந்தையுடன் பார்க்க வந்தவர்களுக்கே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட கலந்துதுரையாடலில் போலீஸ் உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதன்போது மக்களின் கேள்விகளுக்கு போலீசார் பதிலளித்திருந்தனர் .
நேற்றைய சம்பவத்தின் போது போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் . அதன் பின்பு அந்த இடத்திற்கு வந்த போலீசார் மக்கள் விட்டு சென்ற துவிசக்கரவண்டிகளை சேதப்படுத்தியுள்ளனர் . அத்துடன் மேலும் பல வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் . பின்னர் படையினர் ஊரிற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர் , ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்திருந்தது
படையினர் வீதியில் நின்றவர்கள் மீது தாக்கி உள்ளனர் ,நேற்று முதல் படையினர் ஊரில் உள்ளனர் .
இது பற்றிய மேலதிக தகவல்களை விரைவில் பதிவேற்றுவோம்

இது பற்றிய மேலதிக தகவல்களை விரைவில் பதிவேற்றுவோம்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!