Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் பொலிஸார் ஊரடங்குச் சட்டம்

இன்று இடம்பெற்ற கலவரத்தின் பின்பு இராணுவம் ஊர் முழுவதும் உள்ளனர் , வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது , வீதிகளில் நின்றவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கி உள்ளனர் , தற்ப…

Image
இன்று இடம்பெற்ற கலவரத்தின் பின்பு இராணுவம் ஊர் முழுவதும் உள்ளனர் , வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது ,
வீதிகளில் நின்றவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கி உள்ளனர் ,
தற்போது ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்துள்ளது .
இன்று பிடிபட்டவர்களை போலீசார் நாளை  நீதி மன்றத்தில் கொண்டு செல்ல உள்ளனர்.


இது தொடர்பான முழு தகவல்களும் நாளை தெரிவிப்போம்

இன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சிலரிடம் கேட்ட போது 
விநாயகபுரம் பாலக்குடாவில் இரண்டு தெரியாத நபர்கள் இருந்துள்ளனர் , சில நாட்களாக எமது பிரதேச இளைஞர்கள் அவதானிப்பாக இருந்தனர்  
அந்த இரண்டு பேர் மீதும் சந்தேகம் இருந்ததால் அவர்களை பிடித்த போது அங்கு போலீசார் வந்துள்ளனர் இதனால் மக்கள் ஆத்திரம் அடைந்து 


பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது 

பொலிஸ் நிலையங்களைச் சுற்றி திரண்ட பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி பல முறை துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை கலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

You may like these posts

Comments