Contact Form

Name

Email *

Message *

போஷாக்கு மாதத்தை முன்னிட்டு திருக்கோவிலில் விழிப்புணர்வு ஊர்வலம்

சுகாதார அமைச்சின் போஷாக்கு மாதத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சுகாதாரப் பணிமனையும் வலயக்கல்வி பணிமனையும் இணைந்து வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் "உங்கள் போஷாக…

Image
சுகாதார அமைச்சின் போஷாக்கு மாதத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச சுகாதாரப் பணிமனையும் வலயக்கல்வி பணிமனையும் இணைந்து வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் "உங்கள் போஷாக்கு உங்களது கைகளில்'எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை காலை திருக்கோவிலில் நடைபெற்றது.

இவ் ஊர்வலம் திருக்கோவில் சுகாதார பணிமனைக்கு முன்பாக வேள்ட் விஷன் நிறுவன திட்டப் பணிப்பாளர் கிறிஸ்ரி ஜெயானந்தன் தலைமையில் ஆரம்பமாகி தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.பின்னர் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் திருக்கோவில் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர் திருமதி இரா.சுலோச்சனா,வலயக் கல்வி உதவிப் பணிப்பாளர் திருமதி க.திலகவதி,திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் தவராஜா,வேள்ட் விஷன் பொத்துவில் முகாமையாளர் ஐ.மைக்கல்,பிரதேச பாடசாலை மாணவர்கள்,பொது சுகாதார உத்தியோகஸ்தர்கள்,குடும்ப நல தாதிகள் மற்றும் ஆசிரியர்கள்,வேள்ட் விஷன் நிறுவன உத்தியோகத்தர்கள் என பெரும் திரளானோர் போஷாக்கு உணவு வகைகள் பற்றிய பதாதைகளை தாங்கியவாறு விழிப்புணர்வில் ஊர்வலமாகச் சென்றனர்.

You may like these posts

Comments