
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரதத்தின் கல்யாணபடிப்பு நிகழ்வானது கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாள் சூரசம்ஹார நிகழ்வினை தொடர்ந்து மறுநாள் நடைபெறுவது வழமை அதேபோல் இவ்வருடமும் 14.11.2018 புதன்கிழமை நேற்று இரவு வெகுசிறப்பான முறையில் இவ் கல்யாணபடிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கந்தபுராணத்தின் கல்யானபடிப்பு, முருகப்பெருமானின் திருமாங்கல்ய தரணம் தொடர்ந்து திருப்பொன்னூஞ்சல் மற்றும் சுவாமியின் உள்வீதி உலா ஆகியன இடம்பெற்றது. இவ் கந்த சஷ்டி விரத கிரியைகள்யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் அவர்களினாலும் மற்றும் சிவஸ்ரீ அங்குஷனாதக்குருக்கள் அவர்களினால் நடாத்தி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்த்த அடியார்கள் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டனர்.