Contact Form

Name

Email *

Message *

"சங்கமன் கண்டி மலைமுருகன்"ஆலய நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட தாண்டியடி கிராமத்தில் அமைந்துள்ள "சங்கமன் கண்டி மலைமுருகன்"ஆலய நிர்மாணப்பணிகள் நட…

Image

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட தாண்டியடி கிராமத்தில் அமைந்துள்ள "சங்கமன் கண்டி மலைமுருகன்"ஆலய நிர்மாணப்பணிகள் நடைபெற்று முடிவுறும் வேளையில் - தொல்பொருள் திணைக்களத்தினால் இப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இவ் ஆலயம் கி.பி .995 - 1070 ஆம் காலப்பகுதியில் இலங்கை முழுவதையும் ஆண்ட இராஜ இராஜன் சோழனால் பொலநறுவையில் ஒர் சிவன் கோவிலை அமைத்தான்-இவன் வழிவந்த சோழ குலத்து வம்சத்தினைச் சேர்ந்த "சங்கமன்" எனும் சிற்றரசன் ஒர் மாளிகை கட்டி தாண்டியடி கிராமத்தில் வாழ்ந்ததுடன் பல நூற்றாண்டுகளாக கதிர்காமம் செல்லும் பாத யாத்திரிகர்கள் தங்கித் தரித்துச் சென்றதுமான பழமை வாய்ந்த இக் கோவில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உதவியுடன் புணரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இக் கோவில் இலங்கையின் முதல் தமிழ் மன்னன் இராவணேஸ்வரனின் மனைவியின் "நாகர்" குலத்தவர்களும் ஆதி திராவிடர்களினாலும் வழிபட்டு வந்ததுமான இக்கோவிலை குளக்கோட்ட மன்னன், ஆடகசவுந்தரி காலத்தில் புணரமைக்கப்பட்டதுடன் திருகோனேஸ்வரம் ஆலயத்தின் கல்வெட்டிலும் இக்கோவில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.









You may like these posts