இத்தகவலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் 10பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று மத்திய சந்தை பிரதேசத்தில் மேலும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!