Contact Form

Name

Email *

Message *

கல்முனை சுகாதார பிராந்திய பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு; மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை …

Image


அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று(12) மாலை நடாத்திய ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது,

தற்போது அம்பாறை மாவட்ட நிலைமை கருதி சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர்

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் நேற்று(11) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் கொழும்பு பிரதேசத்தில் இருந்து வந்தவர் என்பதுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 13 தினங்களுக்கு பின்னர் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவரது உறவினர்களின் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜி சுகுணன் தெரிவித்தார்

இதுவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொரானா தொற்றானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொத்துவில் – 7 , கல்முனை -3, மருதமுனை -2, சாய்ந்தமருது – 1, அக்கரைப்பற்று -1, இறக்காமம்-6, திருக்கோவில் (தம்பிலுவில்)-01 என 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You may like these posts

Comments