அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 பகுதியில் கொரோனா தொற்றுடைய ஒரு நபர் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச சபையினால் தொற்று நீக்கும் மருந்து விசிறும் நடவடிக்கைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்று பிசீஆர் பரிசோதனை முடிவின் அடிப்படையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிசார் என கொவிட் 19 தடுப்பு சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர் நேற்று இரவு ஒலுவில் கொவிட் 19 தடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் குறித்த நபரின் மனைவிக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் கொவிட் 19 தடுப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திருக்கோவில் பிரதேச சபையினால் திருக்கோவில் பிரதேசத்தின் மக்கள் நடமாடும் இடங்களான பொது சந்தை வர்த்தக நிலையங்கள் வங்கிகள் போன்ற இடங்களில் தொற்று நீக்கும் மருந்து வீசிறப்பட்டு கொரோனா தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் தவிசாளர் இ.வி.கமலராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!