இதற்கமைய தொற்றா நோய்களுக்கான கிளினிக் நோயாளிகளின் மருந்துகளை அவர்களின் வீட்டிக்கே கொண்டு செல்லும் முகமாக வைத்தியசாலைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (02) கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் அதன் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்றது .
ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் ஜி. சுகுணன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனைகுட்பட்ட 35 தொலைபேசி அவசர இலக்கங்கள் வழங்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது கொரோனா கொவிட் 19 வைரஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டும், நீரிழிவுநோய், மற்றும் ஏனைய நோய்களுக்கு கிளினிக் மருந்துகளை பெறும் நோயாளிகளுக்கு இலகுவான வசதியை ஏற்படுத்தும் முகமாக இச் சேவை வழங்கப்படுகின்றது.
வீடுகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லும் முகமாக எங்களது உத்தியோகதர்கள் உங்கள் காலடிக்கு வந்து இச் சேவையினை முன்னெடுப்பார்கள்.
பொத்துவில் ,திருக்கோவில் நிந்தவூர், சம்மாந்துறை வைத்திசாலை உட்பட சுகாதார பணிமனை சேவை பகுதிக்குட்பட்ட 15 வைத்தியசாலைகளுக்கும், 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு இவ் தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்து வழங்கியுள்ளோம்.
இங்கு வழங்கிய தொலைபேசி இலக்கம் மூலம் உங்கள் பிராந்தியங்களில் காணப்படுகின்ற வைத்தியசாலைகள் மூலம் பொதுமக்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் ஜி. சுகுணன், சேவை பெறுவோர் சரியான முகவரியை வழங்க வேண்டும் அப்போது தான் மருந்துகளை இலகுவாக வழங்க முடியும் என்றும் இங்கு வழங்கிய தொலைபேசி இலக்கம் பிஸியாக காணப்பட்டால் வட்ஸ்அப், வைபர், குறுந்தகவல்கள் மூலம் உரிய இலக்கங்களோடு தொடர்பினை ஏற்படுத்த முடியும்.
குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரினாலும், கொரோனா கோவிட் வைரஸ் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து வசித்தாலோ அவர்கள் தொடர்பாக எவ்வித அச்சமின்றி நீங்கள் எமது தொலைபேசி இலக்கம் அல்லது எமது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும்
இன்று உலகில் மாத்திரமல்ல எமது நாட்டில் கொரோனா வைரஸ் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவிவிட கூடாது என்பதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் எமது கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பல நடவடிக்கைகளை முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்புப்புக்களை வழங்க வேண்டும் முக்கியமாக பொது மக்கள் சமுக இடைவெளி, கைகழுவுதல் போன்ற விடயங்களை முறையாக பேணல் வேண்டும் .
கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பகுதிகளில் உள்ள சுற்றாடல் பகுதிகளில் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமிகளை அழிக்க கூடிய இரசாயன பாதார்த்தங்கள் வாரத்திற்கு இரு முறை தெளித்து வருகின்றமையும் விஷேட அம்சமாகும்.
இதன் போது கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி என். ஆரிப், திட்டமிடல் பணிப்பாளர் எம்.சீ. எம்.மாஹிர், பணிமனையின் தாய் சேய் நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ. எம்.பஸால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
