
[MN_Sathu]
தம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வானது குருதேவர் பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் செல்வி.இ.சாம்பவிலோஜினி அவர்களின் தலைமையில் திகோ/தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 2018.12.09 நேற்றையதினம் ஞயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு தி.ஜே. அதிசயராஜ் மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், திகோ/தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) முன்னாள் அதிபர் திரு.வ.ஜயந்தன் , திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் திரு.எம் .குணசேகரம் , கிழக்கு மாகாண முன்பள்ளி பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திரு.பி.மோகனதாஸ், விசேட அதிதிகளாக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. ஜினி ருபன், கிராம உத்தியோகத்தர் திரு. எஸ். சுயகுமார் , திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி. சர்மிலா பிரசாத், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் அடுத்த வருடம் 2019ல் தரம் ஒன்றிற்கு செல்லவிருக்கும் மாணவ மாணவிகள் அதிதிகளினால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இவ் விடுகை விழாவில் குருதேவர் பாலர் பாடசாலையின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுக்கும் இடம் பெற்றது. மேலும் இன் நிகழ்வில் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், பாலர் பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.