
[Sana]
வருடாந்தம் தாண்டியடி அருள்மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி நிலையத்தினரால் மேற்கொள்ளப்படும் சிரமதான நிகழ்வானது கடந்த 01.04.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சத்திய சாய் சர்வதேச நிறுவனத்தின் சேவை இணைப்பாளர் மற்றும் தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் சத்திய சாய் நிலையத்தின் சுமார் 50 மேற்பட்ட சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர்
இதன் போது ஆலயம் மற்றும் ஆலயத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற மற்றும் அதனை அண்டிய சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன். தொடர்ந்து சாய் பக்தர்களினால் பஜனை நிகழ்வும் நாராயண சேவா நிகழ்வும் இடம்பெற்றது.












Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!