தம்பிலுவில் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 8 வீரர்கள் 6 ஓவர் கொண்ட மறைந்த திரு.சுந்தரமூர்த்தி, திருமதி.சுந்தரமூர்த்தி ஞாபகர்த்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது கடந்த 20-05-2017 சனிக்கிழமை ஆரம்பமாகியது.இக் கிரிக்கெட் சுற்று போட்டியின் விலகல் முறையிலான போட்டிகள் 20,21,27,28 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. சுற்று போட்டியில் அரை இறுதி போட்டிக்கு தம்பிலுவில் ஆதவன் அணி, தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணி,திருக்கோவில் உதயசூரியன் அணி,அக்கரைப்பற்று BBB அணியினரும் தகுதி பெற்றுள்ளனர்.
இக் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அரை இறுதி போட்டி மற்றும் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்று கிழமை 04-06-2017 நடை பெரும்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!