
எமது பிரதேசத்தில் பின்தங்கிய கிராமங்களில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்காக கல்விசார் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு canada Chidaes அமைப்பின் உதவியுடன் முதற்கட்ட பணியாக காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 19.12.2016 திங்கள் நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் canada Chidaes அமைப்பின் திருக்கோவில் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களான M.மேகசியாமளன் மற்றும் S.தேவிதர்சன் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!