Contact Form

Name

Email *

Message *

காயத்திரி கிராம வீதிகள் காபெட் வீதிகளாக அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

[Photos: NR] திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட திருக்கோவில் நான்கு, விநாயகபுரம் காயத்திரிகிராமத்தில் காணப்படும் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதனால் இவ்…

Image
[Photos: NR]

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட திருக்கோவில் நான்கு, விநாயகபுரம் காயத்திரிகிராமத்தில் காணப்படும் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதனால் இவ் வீதியினை பயன்படுத்துகின்ற  பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள், மற்றும் வேலைக்கு செல்வோர்,பொதுமக்கள் போன்றோர் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் நிதியின்  கீழ் இக்கிராம வீதிகளில் ஐந்து(05)  வீதிகள் காபெட் வீதிகளாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வான அடிக்கல் நடும் நிகழ்வானது காயத்திரிகிராம சமூக தரிசன ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று 10.03.2017 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.



இன் நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சமாதிபிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இதில்  பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு, திருக்கோவில் நான்கு கிராம அலுவலர் திரு சுகிர்தராஜன்,  திருக்கோவில் நான்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.கலைமாறன் மற்றும் பொதுமக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இதனை தொடர்ந்து  பொதுக்கூட்டம் நிகழ்வானது  காயத்திரிகிராம சமூக தரிசன ஒன்றிய கிளையில் நடைபெற்றது. இதில் இக்கிராமத்தின் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் தேவைப்பாடுகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் போன்றவை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

































You may like these posts

Comments