தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட ஆண்டுக்கான மாபெரும் மென்பந்து கிறிக்கட் சுற்று போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 19.03.2017 ஞாயிறு அன்று தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இவ் இறுதிப்போட்டியில் தம்பட்டை ஏலவேன் ஸ்டார் அணிக்கும் மற்றும் பாலமுனை அல் அரபா அணிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் தம்பட்டை ஏலவேன் ஸ்டார் அணி வெற்றிவாகை சூடியது. வெற்றிபெற்ற அணிகளுக்கான வேற்றிகேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன்.
மற்றும் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு கழகத்தினால் கடந்த வருடம் 2016 ல் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கியும் கௌரவித்ததுடன் தம்பிலுவில் களுதாவளை சிவலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினர் மற்றும் Foundation Of Goodness மற்றும் youth progressive foundation
அமைப்பு ஆகியவற்றினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அப்பியாசப்புத்த்கங்கள் மற்றும் பாடசாலை பை ஆகியனவும் வழங்கப்பட்டது.
























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!