மகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு உலக சைவப் பேரவையின் சிவராத்திரி கொடிதினம் நிகழ்வானது 2017.02.24 வெள்ளிக்கிழமை நேற்று காலை 9.30மணியளவில் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவபணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம் தலைமையில் இடம் பெற்றது.இன் நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இதில் தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் அதிபரும், திருக்கோவில் பிரதேச இந்துமான்ற தலைவருமான திரு.V.ஜெயந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச ஆலயங்களின் அறங்காவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், குருகுல மாணவர்களும் கலந்து கொண்டனர்.























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!