Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விநாயகர் சஷ்டி விரத தீர்த்தோற்சவம்

[Photos: NR] தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கடந்த 14.12.2016 அன்று  ஆரம்பமான விநாயகர் சஷ்டி விரதமாது வெகுசிறப்பான முறையில் தினமும் பூஜைகள், ஆராதனைகளும், தினமும…

Image

[Photos: NR]

தம்பிலுவில் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கடந்த 14.12.2016 அன்று  ஆரம்பமான விநாயகர் சஷ்டி விரதமாது வெகுசிறப்பான முறையில் தினமும் பூஜைகள், ஆராதனைகளும், தினமும் பிள்ளையார் கதை கூறும் நிகழ்வும், மற்றும் கடந்த  02.01.2017 திங்கள்கிழமை கஜமுகாசூரன்போர் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 இவ் விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதிநாள் 04.01.2017  புதன் நேற்று   சமுத்திர  தீர்த்தோற்சவம் இடம் பெற்றது. விநாயகப்பெருமான் மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு  தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டு தம்பிலுவில் தாளையடி சிவன் ஆலயத்தின்  சமுத்திர முற்றத்தில் அபிஷேக ஆராதனைகள் தம்பிலுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ.க.லோகனாதக்குருக்கள் ஐயா அவர்களினால் இடம்பெற்று  பக்த அடியார்களின் அரோகரா கோசத்துடன் விநாயகப்பெருமானின் சமுத்திர தீர்த்தோற்சவ நிகழ்வானது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பகத் அடியார்கள் கலந்து கொண்டனர்.



































You may like these posts

Comments