Contact Form

Name

Email *

Message *

திகோ/ காயத்திரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

திகோ/காயத்திரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வானது கடந்த 06.01.2017 வெள்ளி அன்று  பாடசாலையின் அதிபர் திரு. நா.உதயகுமார் அவர்களின்  தலைமையில் பாடசாலையில்  இடம்பெற்றது…

Image
திகோ/காயத்திரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வானது கடந்த 06.01.2017 வெள்ளி அன்று  பாடசாலையின் அதிபர் திரு. நா.உதயகுமார் அவர்களின்  தலைமையில் பாடசாலையில்  இடம்பெற்றது.


இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், கௌரவ   அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர். சுகிர்தராஜன், சிறப்பு  அதிதியாக திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், அதிதிகளாக  திருமதி.ஏ.ஜயந்தன் மற்றும் சமாதிபிள்ளையார் ஆலய தலைவர் திரு.வி.வியஜகுமார் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள்  மாணவர்களின் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த வருடம் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள், கடந்த வருடம் தமிழ் மொழித்தின, ஆங்கில மொழித்தின  வலய மற்றும்  மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் பரிசில்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கபட்டனர். அத்துடன் இதன் போது மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.




















You may like these posts

Comments