திகோ/ திருக்கோவில் குமர வித்தியாலயத்தின் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிக்கும் விழாவானத்து பாடசாலையின் அதிபர் திரு.இ.இரத்தினகுமார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.இந் நிகழ்வானது அக்கிராசப் பிள்ளையார் ஆலய பிரதம குரு பூஜாசுடர் சிவஸ்ரீ தே.லதீப சர்மா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் மாவட்ட பாடசாலை வேலைகள் பொறியியலாளர் திரு.ஜி.அருண் அவர்களும், சிறப்பு அத்தியாக திரு.ஏ.ஜி.நிஸாம் மற்றும் விசேட அதிதிகாளாக வலயக்கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி.கே.முரளிதரன், முறைசாராக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.கே.வரதன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.












Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!