Contact Form

Name

Email *

Message *

இன்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகின...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இலங்கையின் 4வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு   18.12.2016  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி …

Image
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இலங்கையின் 4வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு   18.12.2016  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை  திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


 அந்தவகையில் பொத்துவில் தேர்தல் தொகுதிக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச இளைஞர் கழகங்களின் வாக்களிக்க தகுதிபெற்ற உறுப்பினர்கள் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.


இதன்படி திருக்கோவில் பொத்துவில் தேர்தல் தொகுதிக்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக 376 வாக்குகளில் வாக்குக்கள் அளிக்கப்பட்டது,  அதில் 358 வாக்குக்கள்  லோ.சுலக்சன் அவர்களுக்கும் 14 வாக்குக்கள் எஸ்.டினோஜன் அவர்களும் பெற்றுக்கொண்டனர் மேலதிக வாக்குகளை ஏனையோர் பெற்றுக்கொண்டனர்.

  மேலும்  பொத்துவில் தொகுதியில் காரைதீவினை சேர்த்த  லோ.சுலக்சன் அவர்கள்  1256 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு எமது பிரதேசம் மற்றும் எமது தம்பிலுவில்.இன்போ இணைய குழு சார்பான மனமார்ந்த வாழ்த்துக்கள்.

You may like these posts

Comments