
ஸ்ரீ லங்கா பொலிஸ் பிரிவில் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 150வது தேசிய மக்கள் பொலிஸ் தினமும், திருக்கோவில் போலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செலகப்பிரிவுக்கு உட்பட்ட விநாயகபுரம் 01, 02, 03, 04 பிரிவுகளுக்கான நடமாடும் சேவை நிகழ்வானது கடந்த 2016.10.30 தொடக்கம் 2016.12.18 வரை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் போலிஸ் பரிசோதகர் திரு.பிரசாந்த ஹேரத் தலைமையில் இடம் பெற்றது.
மேலும் இவ் நடமாடும் சேவை நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக திருக்கோவில் போலிஸ் நிலையத்தின் இசை நிகழ்ச்சி ஒன்றும், திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு கிரிக்கட் மற்றும் உதைபந்தட்ட சுற்றுப்போட்டியும் இறுதி நாளான 18.12.2016 ஞாயிறு நேற்றைய தினம் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் திரு. தம்மிக்க பிரியந்த அவர்களும் விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .கிருபாகர சர்மா அவர்களும் அனுசரணையாளர்களும் கலந்து கொண்டனர்.
இவ் இசை நிகழ்ச்சியின் பொது கிரிக்கட் மற்றும் உதைபந்தட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வெற்றி வீரர்களுக்கும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் 1ம் இடத்தினை தம்பிலுவில் ரேன்யஸ் கழகமும், 2ம் இடத்தினை திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன. உதைபந்தட்ட சுற்றுப்போட்டிகளில் 1ம் இடத்தினை திருக்கோவில் அம்மன் விளையாட்டு கழகமும், 2ம் இடத்தினை திருக்கோவில் கதிரவன் விளையாட்டு கழகமும் பெற்றுக்கொண்டன.




























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!