சாதாரண குடும்பத்தினரை சக்திமிக்கவர்களாக மாற்றும் வரவு செலவுத் திட்டமே இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் 12.11.2016 நடைபெற்ற போதே பிரதமர் இதனைக் கூறினார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை இலங்கை சுதந்திரக் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் இணைந்து தயாரித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சியினரையும் ஒன்றிணைத்து வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!