ஆண்களே அதிகமாக HIV தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 405 பேர் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 65 வீதமானோர் ஆண்கள் எனவும் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்திலேயே அதிகமான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!