கடந்த 10 வருடங்களில் மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்துக்களில் 917 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரை இடம்பெற்ற விபத்துக்களிலே அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்,
மேலும் இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 2442 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.