மட்டு - பொத்துவில் வரை ரயில் சேவைக்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிப்பு
கிழக்கு வாழ் தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் போக்குவரத்து தேவைகளை உணர்ந்து செயற்பட்டமையினால் ஏற்பட்ட வெற்றியே இதுவாகும்
மிக நீண்ட காலமாக கிழக்கு மாகாண மக்களிடையே இருந்துவருகின்ற போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் வகையில் எமது வேண்டுகோளை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரைக்குமான ரயில் சேவைக்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் துரிதமாக எமது கோரிக்கையை ஏற்று நடைமுறைக்கு கொண்டுவர எடுத்துள்ள முயற்சிக்கு எனதும் எங்களது கட்சி சார்பாகவும் நன்றிகளை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, கவுரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்
கடந்த பொதுத்தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்ரஸின் தலைவர் கவுரவ அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்கள் கிழக்கு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க
அரசியல் ரீதியாக எவ்வித லாபங்களையும் கருத்தில் கொள்ளாது சமூகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் நியாயமான சமரசத்தோடும் உச்ச கட்ட விட்டுக்கொடுப்புடனும் செயற்படவே நாங்கள் விரும்புகிறோம் அந்தவகையில் எமது தலைவர் கவுரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் இதயசுத்தியுடன் முன்னின்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள என்றும் தயங்கியதில்லை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் மட்டுக்குமான ரயில் போக்குவரத்தானது வரலாற்றுப்பதிவாகும் அந்த வரலாற்றை கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பதிவு செய்துள்ளது இதன்மூலம் இந்தப் பிரதேசங்களில் துரிதமான அபிவிருத்தியை காணலாம்,இது இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் , அன்றாட காரியங்களை விரைவில் செய்து முடிக்கவும் ஏதுவாக அமையும் இன்னும் பல அபிவிருத்தி செயற்பாடுகளை நாடு முழுதும் செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளது எமது கட்சி அதில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.