இந்த தேசிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் உயிராபத்து மிக்க விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.திடீர் விபத்துக்களால் உயிரிழக்கின்ற மற்றும் அங்கவீனமடையும் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறன நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் கூறினார்.
புதிய சட்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தேசிய வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.