அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றை பொதியிட்டு விற்பனை செய்கையில், அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அண்மையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட ஆறு உணவுப் பொருட்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் 6 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பொதியிடல் செலவாக அதிகபட்சம் 5 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை 11.12.2015 பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.