வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட அவற்றுடன் இணைந்த பிரதேசங்களுக்கான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு, மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் உலக வங்கியினால் இந்த நோக்கங்களுக்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டிருந்ததாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட 101 பிராந்திய நிர்வாக சபைகளுக்குட்பட்ட பாலங்கள், வீதிகள், சிறியளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள், மின்சார விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் உலக வங்கியினால் இந்த நோக்கங்களுக்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டிருந்ததாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட 101 பிராந்திய நிர்வாக சபைகளுக்குட்பட்ட பாலங்கள், வீதிகள், சிறியளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள், மின்சார விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.