ஜெனிவா - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் கிழக்கு மாகாணத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கே.கருணாகரம்( ஜனா), பாராளுமன்ற உறுப்பினர் கே.கவீந்திரன்(ரொபின்) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பான முக்கியத்தவம் மிக்க கூட்டத்தெடராக அமையும் ஐ. நா. வின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரினை நேரில் பார்வையிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜெனிவா சென்றுள்ளனர்.
ஆனாலும் கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான கே.கருணாகரம்( ஜனா), பாராளுமன்ற உறுப்பினர் கே.கவீந்திரன்(ரொபின்) ஆகிய இரண்டு தமிழ் பிரதிநிதிகளே பங்கு பற்றியுள்ளனர்.
ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ் தரப்பு பிரதிநிதிகள் தமிழ் மக்களின் நிலைப்பாடு எதிர்பார்ப்புகள் குறித்து பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விளக்கமளித்தும் வருகின்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!