Contact Form

Name

Email *

Message *

பொதுத் தேர்தல் முடிவுகள் நாளை இரவு 11 மணி முதல் வெளியாகும்: தேர்தல்கள் செயலகம்

இலங்கையின் 15வது பாராளுமன்றத் தேர்தல் நாளை திங்கட்கிழமை (ஒகஸ்ட் 17) நடைபெறவுள்ளது. காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ள வாக்களிப்பினைத் தொடர்ந்து இரவு …

Image


இலங்கையின் 15வது பாராளுமன்றத் தேர்தல் நாளை திங்கட்கிழமை (ஒகஸ்ட் 17) நடைபெறவுள்ளது.


காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ள வாக்களிப்பினைத் தொடர்ந்து இரவு 07.00 மணியளவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கும்.


இதன்பிரகாரம், நாளை இரவு 11.00 மணியளவில் முதலாவதாக தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.


அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You may like these posts