Contact Form

Name

Email *

Message *

குருதேவர் பாலர்பாடசாலையின் (Gurudeva Kindergarten) புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

இதுவரைகாலமும் கிறேட் பாலர்பாடசாலை(Great Kindergarten) எனும் பெயர்கொண்டு இயங்கிவந்த பாலர்பாடசாலையானது பெயர்மாற்றம் பெற்று குருதேவர் பாலர்பாடசாலை(Gurudeva Kindergarten) எனு…

Image


இதுவரைகாலமும் கிறேட் பாலர்பாடசாலை(Great Kindergarten) எனும் பெயர்கொண்டு இயங்கிவந்த பாலர்பாடசாலையானது பெயர்மாற்றம் பெற்று குருதேவர் பாலர்பாடசாலை(Gurudeva Kindergarten) எனும் பெயருடன் இப் புதிய 2015ம் ஆண்டின் கல்விப்பயணதினை ஆரம்பிக்கின்றது.

இதன் அங்குராற்பண நிகழ்வாக 2015ம் ஆண்டின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது. தம்பிலுவில் தம்பிமுத்து வீதியில் அமைந்துள்ள குருதேவர் பாலர்பாடசாலையில் 2015.01.21ம்திகதி புதன்கிழமை நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது இன் நிகழ்வின் போது புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் மலர்செண்டு கொடுத்து அன்பாக வரவேற்றனர்.


இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக திருக்கோவில் வலய முன்பள்ளி ஒருங்கினைப்பாளர் திரு.S.தர்மபாலன் மற்றும் கிழக்குமாகாண முன்பள்ளி ஒருங்கினைப்புக்கான   முகாமைத்துவ உதவியாளர் திரு.P.மோகனதாஸ், சிறப்பு அதிதிகளாக கலைமகள் வித்தியால அதிபர் திரு. பா. சந்திரேஸ்வரன், திருநாவுக்கரசு நாயனார் குருகுல முகாமைத்துவபணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம் மற்றும் பாலர்பாடசாலையின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.













You may like these posts