Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரம் பிரதேசத்தில் பனை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

-அபிவரன்-;- திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் பனைமரத்தில் இருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்க…

Image
-அபிவரன்-;-
திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் பனைமரத்தில் இருந்து தவறிவீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு விநாயகபுரம்  விஷ்னு வீதியைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான 51 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முத்துலிங்கம் கருநாநிதி என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
இதுபற்றி தெரியவருவதாவது
விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் உள்ள வீடு ஒன்றில் உள்ள பனை மரத்தை கூலிக்கு வெட்டுவதற்காக சம்பவதினமான இன்று மாலை 6.45 மணியளவில் பனைமரத்தில் உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே தலையடிபட வீழ்ந்து ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  இதுதொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

You may like these posts