தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2013ல் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோரை பாராட்டும் நிகழ்வு இன்று காலை 11.00மணியளவில் பாடசாலை அதிபர் திரு.பா.சந்திரேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் போது திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R.சுகிர்தராஜன், திருக்கோவில் பிரதேச பிரதேசசெயலாளர் கலாநிதி.M.கோபாலரெத்தினம், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ V.புவிதராஜன், திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.S. தவராசா, பொத்துவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.V.ஜயந்தன், ஆலயடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. குணாளன், காஞ்சிரங்குடா படைத்தளபதி, கலைமகள் வித்தியாலயத்தின் குரு கலாபூசணம் திரு.கனேசமூர்த்திக்குருக்கள், திருக்கோவில் மெதடிஸ்த சபை பொறுப்பாளர், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பளர் கண.இராஜரெத்தினம், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் போது 2013ல் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கேடயங்களும், பதக்கங்களும், பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டது. அத்துடன் இம்மாணவர்களினை சிறப்பாக வழிநடாத்திக்கற்பித்த ஆசிரியர்களான திருமதி.R.கோனேசமூர்த்தி, திருமதி.த.சுந்தரமூர்த்தி ஆகியோரும் பரிசில் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.