Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் , திருக்கோவில் பிரதேசத்தில் கொள்ளைகளில் ஈடுபட்ட ஐவர் கைது ! பொருட்கள் மீட்பு

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 வருடங்களாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 5 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன், இவ…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 வருடங்களாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 5 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 16 ½  பவுண் தங்கநகைகள், 35,000 ரூபா பணம், 6 கையடக்கத் தொலைபேசிகள், எல்.சி.டி. ரக தொலைக்காட்சிப்பெட்டி ஒன்று, கணினி உள்ளிட்டவற்றையும் இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும்; கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபர்கள் கடந்த 3 வருடங்களாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீடுகள் மற்றும் பாடசாலைகளை உடைத்து கொள்ளையிட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்களை வீடுகளில் கைதுசெய்துள்ளதாகவும் 18 முதல்  20 வயது வரையானவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.









You may like these posts