Contact Form

Name

Email *

Message *

கஞ்சிக்குடியாறு ரூபஸ்குளம் புனரமைக்கப்பட்டு 8ஆம் திகதி திறப்பு

திருக்­கோவில் கஞ்­சிக்­கு­டி­யாறு ரூபஸ் குளம் 30 மில்­லியன் ரூபா செலவில் புன­ர­மைக்­கப்­பட்டு எதிர்­வரும் 8ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை சுவாட் நிறு­வ­னத்தின் தலைவர் வ. பர­ம­சிங…

திருக்­கோவில் கஞ்­சிக்­கு­டி­யாறு ரூபஸ் குளம் 30 மில்­லியன் ரூபா செலவில் புன­ர­மைக்­கப்­பட்டு எதிர்­வரும் 8ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை சுவாட் நிறு­வ­னத்தின் தலைவர் வ. பர­ம­சிங்கம் தலை­மையில் திறந்து வைத்து கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அம்­பாறை மாவட்ட சுவாட் அமைப்பு பணிப்­பாளர் லதன் தெரி­வித்தார்.
இந்­நி­கழ்வில், அதி­தி­க­ளாக திருக்­கோவில் பிர­தேச செய­லாளர் எம்.கோபா­ல­ரெத்­தினம்,பிர­தேச சபை தவி­சாளர் வி. புவி­ராஜன் மற்றும் நீர்ப்­பா­சன திணைக்­கள உயர் அதி­கா­ரிகள் ஒக்ஸ்பாம் நிறு­வன அதி­கா­ரிகள் கலந்து கொள்ள உள்­ளனர்.
கடந்­த­கால யுத்த சூழ்­நிலை கார­ண­மாக சுமார் 30 வரு­டங்­க­ளாக இக் குளம் புன­ர­மைப்பு மேற்­கொள்­ளப்­படாமையால் பல வயல் நிலங்கள் நெற்­செய்கை பண்­ணப்­ப­டாமல் இருந்­தன. இந்­நி­லையில் இதனை புன­ர­மைப்பு செய்­வது தொடர்­பாக விவ­சாய அமைப்­புக்­களால் அம்­பாறை மாவட்ட சமூக நல்­வாழ்வு அமைப்­பிற்கு (சுவாட்) கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.
இக் கோரிக்­கையை ஏற்று சுவாட் நிறு­வனம் ஐரோப்­பிய ஒன்­றிய நிதி­யு­த­வி­யுடன் ஒக்ஸ்பாம் நிறு­வன அனு­ச­ர­ணை­யுடன் நீர்ப்­பா­சன திணைக்­கள வழி­காட்­ட­லுடன் ஈயூ ஏகப் எனும் திட்டத்தின் ஊடாக 30 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts