Contact Form

Name

Email *

Message *

ஆரம்பமானது ஆடித் தீர்த்தப் பெருவிழா !

மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக் கோவிலும், சோழர், பாண்டியர் உள்ளிட்ட மன்னர் பலர் புரந்த  வரலாற்றுப் பிரசித்தி பெற்றதுமான  திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத  சுவாமி ஆல…

Image
மட்டக்களப்பின் முதலாவது தேசத்துக் கோவிலும், சோழர், பாண்டியர் உள்ளிட்ட மன்னர் பலர் புரந்த  வரலாற்றுப் பிரசித்தி பெற்றதுமான  திருக்கோவில் அருள்மிகு சித்திரவேலாயுத  சுவாமி ஆலயத்தின் வருடாந்த  ஆடி அமாவாசை தீர்த்தோற்சவப் பெருவிழா, கடந்த  யூலை 20ஆம் திகதி சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ந்து   15 நாட்கள் திருவிழா இடம்பெற்று, எதிர்வரும் ஓகஸ்ட்   ஆறாம் திகதி செவ்வாய்க்கிழமை,  ஆடி அமாவாசை அன்று ஆழிப்புனலாடலுடன் பெருவிழா  இனிதே நிறைவு பெற இருக்கிறது.

விழாக் காலத்தில் அடியார்க்கு அன்னதானமும்,விசேட போக்குவரத்து வசதிகளும்   ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

You may like these posts