அக்கரைப்பற்றில் வெற்றிச் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் கிரேற் பாலர் பாடசாலை தற்பொழுது தம்பிலுவில் தடம் பதிக்கின்றது. கொங்ஹொங் நாட்டின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பிய Educational Technologies limited ( ETL ) உடன் இணைந்து மல்ட்டி மீடியா தொழில்நுட்பத்துடனான நவீன கற்பித்தல் நடவடிக்கையுடனான பாலர் பாடசாலை ஆரம்பமாகின்றது. இவ் கிரேட் பாலர் பாடசாலையானது தம்பிலுவில்-02, தம்பிமுத்து வீதியில் அமைந்துள்ள திருநாவுக்கரசு நாயனார் குருகுல பிரதான காரியாலயத்தில் எதிர் வரும் 2013.01.02ம் திகதி பிரமாணடமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கு இப் பாலர் பாடசாலையின் மூலம் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள்.
- பெரிய காட்சித் திரையில் ஒலி, ஒளியுடனான நவீன கற்பித்த்ல் (மல்ட்டி மீடியா தொழில்நுட்பம்).
- காட்சித் திரையில் வீடியோ மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி.
- மழலைஸ் செல்வங்களின் நுண்ணறிவையும் புத்திக் கூர்மையையும் வளர்க்கக் கூடிய ப்ரோகிராம் கொண்ட கணினி அறை.
- கணினியிலேயே செய்யக்கூடிய ஒன்-லைன் பரீட்சைகள்.
- வீட்டுப் பயிற்சிக்கான Home Work & Work sheets, DVDs.
- மாணவர்களில் தனித்தனிக் கவனம்.
- சிறந்த மாணவர் பாராட்டப்படலும் விருது வழங்கப்படலும்.
- சிறந்த மாணவர்களின் பெற்றோர் பாராட்டப்படலும் விருது வழங்கப்படலும்.
- பிரமாண்டமான சிறுவர் தினக் கொண்டாட்டங்கள்.
- மாணவர் - பெற்றோருடனான கல்வி சுற்றுலாக்கள்.
இவ் நவீன பாலர் பாடசாலை பற்றிய மேலதிக விபரங்களையும், ஏனைய விபரங்களுக்கும் எதிர்வரும் 2012.12.30ம் திகதி தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் பி.ப 3.30மணியளவில் இடம் பெறும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கான கருத்தரங்கில் தவறாது கந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
