தம்பிலுவில் பிரதேசத்தில் வீதியால் நடந்து சென்ற ஆண் ஒருவர் இன்று மாலை திடீரென வீதியல் வீழ்ந்தபோது பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் வீதியல் வீழ்ந்தவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பிலுவில் மயானத்துக்கு அருகில் தம்பிலுவிலில் உள்ள வீட்டிற்கு இன்று மாலை 6 மணிக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்துள்ளார் அப்போது வீதியில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக் குள்ளானதில் வீதியல் வீழ்ந்த தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கூலித்தொழிலாளியான பாபு என்றழைக்கப்படும் கணேசப்பிள்ளை கோணேசமூர்த்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் தம்பட்டையில் உள்ள மதுபானகடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில் வீதியில் நடந்து வந்தபோது திடீரென வீதியில் வீழ்ந்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண் டுவருகின்றனர்
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் தம்பிலுவில் மயானத்துக்கு அருகில் தம்பிலுவிலில் உள்ள வீட்டிற்கு இன்று மாலை 6 மணிக்கு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்துள்ளார் அப்போது வீதியில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக் குள்ளானதில் வீதியல் வீழ்ந்த தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கூலித்தொழிலாளியான பாபு என்றழைக்கப்படும் கணேசப்பிள்ளை கோணேசமூர்த்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் தம்பட்டையில் உள்ள மதுபானகடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில் வீதியில் நடந்து வந்தபோது திடீரென வீதியில் வீழ்ந்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண் டுவருகின்றனர்