திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால்
வழங்கிவந்த குழாய் நீர் கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்து
மக்கள் குடிப்பதற்கு குடிநீர்;இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி
வருகின்றதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்
அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக பல பிரதேசங்களில்
குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவரும் நிலையில்
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள பொதுமக்கள் தேசிய
நீர்வழங்கல் சபையின் மூலம் குழாய் நீரைப் பெற்று தமது குடிநீர் தேவையை பூர்த்தி
செய்துவருகின்றனர். இருந்தபோதும் நீர் வழங்கல் சபை கடந்த 22ம் திகதி
ஞாயிற்றுக்கிழமையில் தொடக்கம் இன்றுவரை குழாய் நீரை நிறுத்தியுள்ளது இதனால்
குழாய்நீர் பாவனையாளர் தண்ணீரைப் பெறமுடியாமல் பல்வேறு அசௌகியங்களை
எதிர்நோக்கிவருவதாகவும் குழாயில் நீருக்கு பதிலாக காற்று மட்டும் வருவதாகவும்
குடிநீரைத் தேடி அலையவேண்டியுள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்
இப்பிரதேசத்திற்கான குழாய் நீரை சாகாமம் குளத்தில் இருந்து நீh வழங்கல்
அதிகார சபை குழாய்மூலமாக வழங்கிவருவதுடன் பொதுமக்களுக்கு எதுவித முன்னறிவுப்பு
எதுவும் இன்றி குழாய் நீரை நிறுத்தியுள்ளது இதனால் 5 ஆயித்துக்கு மேற்பட்ட மக்கள்
குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!