Contact Form

Name

Email *

Message *

மங்கைமாரி அம்மன் கோவில் உற்சவம் இன்று நடக்கிறது

By-koviloor selvarajan திருக்கோவில் தோட்டத்திலே, குடிகொண்டிருக்கும் மங்கைமாரி அம்மன் கோவில் உற்சவம் இன்று நடக்கிறது என்று, தம்பி சயனொளிபவன் மூலம் அறிந்துகொண்டேன். நூறு…

Image
By-koviloor selvarajan
திருக்கோவில் தோட்டத்திலே, குடிகொண்டிருக்கும் மங்கைமாரி அம்மன்
கோவில் உற்சவம் இன்று நடக்கிறது என்று, தம்பி சயனொளிபவன் மூலம்
அறிந்துகொண்டேன். நூறு ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டுக்கு ஒருதரம்
அன்னையவள் கோவில் கதவு  திறந்து மங்கை வடிவில் இருக்கும்
அம்மனுக்கு அலங்காரங்களும், பூஜைகளும், நடைபெறுவது வழக்கம். எமது
பிரதேச மக்கள் பல பகுதிகளிலும் இருந்து அம்மனை தரிசித்து, அவளுக்கு
பொங்கல் வைத்து அம்மனின் அருள் பெற்று செல்வதுண்டு.
புலத்தில் வாழும் பலருக்கு அன்னையவள் தரிசனம் பல வருடங்களாக
கிடைப்பதில்லை. இருந்தாலும் மங்கைமாரி அம்மா ஒரு தாயக இருந்து
எங்களை காக்கிறாள். அன்னையின் அருள் என்றும் எங்களுக்கும், எமது
பிரதேச மக்களுக்கும், அகிலம் முழுவதற்கும் கிடைப்பதாக...
அன்னையின் பெயரால் முன்பே பல பாடல்கள் பாடியுள்ளோம். இன்று
அம்மனுக்காக இந்தப் பாடல்கள்.......

பாடல்.
-----------------

முத்து முத்து மாரியம்மா -எங்க
மங்கைமாரி... மாரியம்மா
பக்தி முத்தி பாடுகின்றோம் -உன்
கருணையினை காமியம்மா.....
சித்தமெல்லாம் நிறைந்தவளே
முத்து  முத்து மாரியம்மா...
எங்களுக்கு அருளுமம்மா
மங்கைமாரி..மாரியம்மா ...

அபிராமி பட்டருக்கு அழகாக காட்சிதந்த
சிவகாமி நீயல்லவா......
அநியாயம் செய்பவரை அடியோடு அழித்துவிடும்
சங்காரி நீயல்லவா......
அகிலத்தைக் காப்பவளும்  எங்கும் நிறைந்தவளும்
அம்பிகையே  நீயல்லவா.....
மங்கைமாரி தோட்டத்திலே மங்கையாக வீற்றிருக்கும்
எங்க மங்கை மாரியம்மா கண்திறந்து பாருமம்மா.....

குங்கும பொட்டழகி சிங்கார சிட்டழகி
எங்கமங்கை மாரியம்மா- நீ
தென்னைமரத் தோப்பினையும் கோரைக்களப்பு ஆற்றினையும்
தேடிவந்த தேவியல்லவா....
சங்கீத சாகரத்தில் சந்ததமும் நீந்துகிறோம் -எங்கள்
சங்கதிகள் கேளுமம்மா
சிங்கமதில் ஏறிவந்து சிரித்த முகம் காட்டி நின்று
எங்களுக்கு அருளுமம்மா மங்கைமாரி மாரியம்மா


 

You may like these posts