தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். நடராசா தர்மலிங்கம் (ஓய்வு பெற்ற கூட்டுறவு பரிசோதகர், உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய தலைவர், அக்கரைப்பற்று தெற்கு கிராமசபை முன்னாள் தவிசாளர், அக்கரைப்பற்று தெற்கு ப.நோ.கூ.ச முன்னாள் தலைவர், தம்பிலுவில் கமநல சேவை நிலைய முன்னாள் தலைவர்) அவர்கள் 13.09.2011 செவ்வாய் கிழமை அன்று காலை இறைவனடி சோ்ந்தார்..
அன்னார் காலஞ்சென்ற நடராஜா, கனகம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற இராசையா (ஓய்வு பெற்ற அதிபர்), சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
நீலாம்பிகையின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தனஞ்ஜெயன், திருமதி. கலாநிதி ஹேமலதா, காலஞ்சென்ற மகேந்திரன், திருமதி. கலாநிதி கேதாஸ்வரி (ஆசிரியை - தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம்), திருமதி கலாநிதி பிரபா (கனடா), திரு. இராஜசேகரா (பிராந்திய உணவுகள் மருந்துகள் பரிசோதகர் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மட்டக்களப்பு), திரு. இராஜேஸ்வரன் (முகாமையாளர் - அபான்ஸ் லிமிட்டெட், அக்கரைப்பற்று), ஆகியேரின் அன்புத் தந்தையும்,
திரு. ஆறுமுகம் கணேசமூர்த்தி (ஓய்வு பெற்ற அதிபர்), திரு கணபதிப்பிள்ளை ஞானலிங்கம் (ஆசிரியர் - விநாயகபுரம் மகா வித்தியாலயம்), திரு. நடேசு செந்தில்நாதன் (கனடா), திருமதி. சிவரதி இராஜசேகரா (பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார தாதிய சகோதரி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மட்டக்களப்பு), திருமதி. ஜெகதாம்பிகை இராஜேஸ்வரன் (ஆசிரியை - விநாயகபுரம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரு. க.பவணன் (ஆசிரியர் - தம்பட்டை மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற கல்யாணி, திரு. க.அருணன் (பொறியியலாளர், கொழும்பு), க.பிரகாசன் (மருத்துவ பீடம் - இறுதியாண்டு, கிழக்குப் பல்கலைக்கழகம்), க.நிரஞ்சனன் (மருத்துவ பீடம் - 2ம் ஆண்டு, கிழக்குப் பல்கலைக்கழகம்), க.தனுசன், ஞா.பத்திரப்பிரியன், ஞா.துவாரகன், இ.அபிநயா, இ.தனக் ஷயா ஆகியேரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (முன்னாள் விவசாய ஆலோசகர்), காலஞ்சென்ற இராஜரெட்ணம் (ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி), காலஞ்சென்ற சோதிலிங்கம், காலஞ்சென்ற தெய்வநாயகி பரமன், திரு. குணசேகரம் (ஓய்வுபெற்ற தொழிநுட்பவியலாளர்), திருமதி. ஜெயமலர் பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
திரு நேசராஜா (ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர், அவுஸ்திரேலியா), திரு. சாத்வீகராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), திருமதி. புவனேஸ்வரி கண்ணமுத்து (ஓய்வு பெற்ற ஆசிரியை), திருமதி. ஜெகதாம்பிகை உருத்திரன், திருமதி. இராஜலஷ்மி வாசுதேவன், திரு. சிவானந்தராஜா (ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் - ஆலையடிவேம்பு ப.நோ.கூ.ச), திரு. லோகிதராஜா (ஓய்வு பெற்ற அதிபர்), திருமதி. நிர்மலாதேவி பேரின்பராஜா (இலிகிதர் - ஆலையடிவேம்பு ப.நோ.கூ.ச), திருமதி. பத்மநாதன், திருமதி. இராஜரெட்ணம், திருமதி. சோதிலிங்கம், திருமதி. குணசேகரம், காலஞ்சென்ற பரமன் (ஆசிரியர்), திரு. பரமேஸ்வரன் (முன்னாள் செயலாளர் - இந்து கலாசார அமைச்சு, மகாண கல்வி அமைச்சு) ஆகியேரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.09.2011 செவ்வாய் கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் தம்பிலுவில் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்.
pppp
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!