திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பாவித்த 22 பேரை மின்சார சபையும் பொலிஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் தலைமைக்காரியாலய புலனாய்வுப் பிரிவு திருக்கோவில் பொலிஸாருடன் இணைந்து மின்மானியில் குளறுபடி செய்த 19 பேரையும் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 3 பேரையும் சம்பவதினம் மாலை கைது செய்தனர்.
இவர்களைப் பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்களை 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா வரையிலான சரீரப் பிணையில் விடுவித்து அடுத்த தவணையில் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இலங்கை மின்சார சபையின் தலைமைக்காரியாலய புலனாய்வுப் பிரிவு திருக்கோவில் பொலிஸாருடன் இணைந்து மின்மானியில் குளறுபடி செய்த 19 பேரையும் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 3 பேரையும் சம்பவதினம் மாலை கைது செய்தனர்.
இவர்களைப் பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்களை 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா வரையிலான சரீரப் பிணையில் விடுவித்து அடுத்த தவணையில் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!