வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடி மகோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 17ம் திகதி தீர்த்தோற்சவம் இடம் பெறும். கதிர்காமத்திலும் செல்லக்கதிர்காமத்திலும் பக்தர்கள் இப்போதே அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து கால்நடையாக சென்ற பக்தர்களும் தற்போது கதிர்காமத்தை சென்றடைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.