திருக்கோவில் விநாயகபுரம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தர்.
காஞ்சிரங்குடாவிலிருந்து தம்பிலுவிலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சென்ற தம்பிலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த நா.நடேஸ்வரன் (41 வயது) என்பவரே விநாயகபுரம் கனுவல் அடித்த முடக்கு சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமடைந்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிரங்குடாவிலிருந்து தம்பிலுவிலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சென்ற தம்பிலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த நா.நடேஸ்வரன் (41 வயது) என்பவரே விநாயகபுரம் கனுவல் அடித்த முடக்கு சந்தியில் ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயமடைந்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!