கடந்த பெப்பிரவரி மாதம் திருக்கோவில் பிரதான வீதியில் உள்ள குறித்த இரு கடைகளையும் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.அடிப்படையில் சம்பவதினம் மாலை 6 மணியளவில் விநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த 17,19 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!