Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி !

விநாயகபுரத்தில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ! திருக்கோவில் பிரதேசத்தில் 03.12.2020 இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விநாயகப…

Image
விநாயகபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி !




திருக்கோவில் பிரதேசத்தில் 03.12.2020 இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விநாயகபுரம் பிரதேசத்தினை சேர்ந்த தனிமைப்படுத்தலில் இருந்த வர்த்தகர் ஒருவருக்கே இவ்வாறு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 11.11.2020 அன்று முதலாவது தொற்றாளரும், 29.11.2020 திகதி ஒரு தொற்றாளரும், 30.11.2020 திகதி மேலும் இரண்டு பேரும், 02.12.2020 நேற்றைய தினம் சங்கமன்கண்டி ஒரு தொற்றாளரும், 03.12.2020 இன்றையதினம் மேலும்
ஒருவரும் இனங்கானப்பட்டுள்ளனர்.

இத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.

You may like these posts

Comments